மே தினத்தை முன்னிட்டு சுமார் 2,800 போக்குவரத்து பொலிஸார் கடமையில்!!

252

மே தினத்தை முன்னிட்டு சுமார் 2,800 போக்குவரத்து பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் இவர்கள் கடமையில் ஈடுபடுவார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சர்வதேச மே தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்பிரகாரம் கொழும்பு மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் இன்று (30) இரவு முதல் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மற்றும் கண்டியில் 16 மே தின பேரணிகள் இடம்பெறவுள்ளன.

இதனால் பெரும் எண்ணிக்கையிலான பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.