முதலையின் வைற்றுக்குள்ளிருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுமி, நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

314

 
நாளை (02.05.2017) தனது 14ஆவது பிறந்த தினத்தை கொண்டாடவிருந்த சிறுமி ஒருவர் காணாமல் போனநிலையில் முதலையின் வயிற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சோகச் சம்பவம் அநுராதபுரம், கல்னேவ பகுதியில் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கல்னேவ, புலன்நட்டுவ குளத்தில் கடந்த 27ஆம் திகதி இரவு, தமது பெற்றோர் மற்றும் நண்பர்களுடன் நீராடிக் கொண்டிருந்த 13 வயதுடைய சிறுமி திடீரென காணாமல் போயுள்ளார்.

இதனையடுத்து கடற்படையினரின் உதவியுடன் சிறுமியை தேடிய போது குளத்தில் இருந்த முதலை ஒன்றின் வயிற்றில் சிறுமி இருப்பதை அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து சிறுமியின் சடலம் முதலையின் வயிற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.