சர்வதேச உழைப்பாளர்கள் தினம் இன்று!!

355

இன்று சர்வதேச தொழிலாளர் தினமாகும். இதனை இலங்கையில் அனுஷ்டிக்கத் தேவையான சகல ஏற்பாடுகளையும் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கமைய கொழும்பு, யாழ்ப்பாணம், அம்பாறை, கிளிநொச்சி, வவுனியா மற்றும் கண்டி ஆகிய பல பகுதிகளிலும் மே தின ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இலங்கையின் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின பேரணி பொரல்லை கெம்பல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மேலும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினப் பேரணி கண்டி – கெடம்பே மைதானத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி காலி முகத்திடலில் தமது மே தின நிகழ்வுகளை நடத்தவுள்ளது.

அத்துடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இவ்வாண்டின் மே தினம் வட மாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்திலும், கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்திலும் இடம்பெறவுள்ளது.