நிதி சேகரிப்பில் ஈடுபட்ட போலி சத்திரசிகிச்சை மருத்துவர் கைது!!

553

சத்திர சிகிச்சை நிபுணராக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு தம்புள்ளை நகரில் நிதி சேகரிப்பில் ஈடுபட்ட வந்த ஒருவரை இளைஞர்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் வியாபாரம் நடத்தி வந்த பெண்ணொருவரிடம் அவர் நிதி சேகரிக்க முற்பட்ட போது பெண்ணுக்கு அறிமுகமான சிலர் சந்தேகநபரை இன்று (30) பிற்பகல் அளவில் பிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் மாத்தளையைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்கவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தம்புள்ளை பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.