மாணவி வித்தியா படுகொலை வழக்கை விசாரணை செய்ய சிறப்பு ‘ட்ரயல் அட்பார்’!!

228

ஊர்காவற்றுறை – புங்குடுதீவு பகுதியின் மாணவியான சிவலோகநாதன் வித்யாவை கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தி படுகொலைச் செய்ததாக கூறப்படும் சந்தேக நபர்களுக்கு எதிராக ட்ரயல் அட்பார் முறையிலான விசாரணை ஒன்று இடம்பெறவுள்ளதாக அறிய முடிகிறது.

நீதிவான் நீதிமன்ற விசாரணைகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில் யாழ். மேல் நீதிமன்றில் சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகையை தககல் செய்து இவ்வாறு ட்ரயல் அட்பார் விசாரணையை ஆரம்பிக்க சட்ட மா அதிபர் திணைக்களம் தயாராகி வருவதாக அறிய முடிகிறது.