வவுனியாவில் றொக்கற் விளையாட்டுக்கழகம் நடத்தும் மாபெரும் விளையாட்டுப்போட்டி!!

231

 
வவுனியா கோவில்புதுக்குளம் றொக்கற் விளையாட்டுக் கழகத்தின் 41 வது ஆண்டு நிறைவை முன்னிட்டும் தமிழ் சிங்கள புத்தாண்டையிட்டும் நடத்தப்படும் மாபெரும் விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வு நேற்று (30.04) காலை 8.00 மணிக்கு வி.ஜோஎல் நிரோசன் தலைமையில் நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வாக ஆண் பெண்களுக்கான மரதன் ஓட்டப்போட்டிகள் மற்றும் சைக்கிள் ஓட்டப்போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அத்தோடு இன்று மேதினத்தன்று (01.05) வவுனியா இந்துக்கல்லூரி மைதானத்தில் மாலை 2 மணிதொடக்கம் ஏனைய விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.