வவுனியாவில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் புரட்சிகர மேதின ஊர்வலம்!!

270

 
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் புரட்சிகர மேதின ஊர்வலம் இன்று(01.05.2017) காலை வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலத்தில் ஆரம்பமாகி வவுனியா நகரசபை மண்டபத்தை சென்றடைந்தது.

இவ் ஊர்வலத்தின் போது அரசே அனைத்து அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய், அரசே அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகளைக் குறை, அரசே மக்களின் நிலங்களை மக்களிடம் கொடு, அமெரிக்காவே உலகில் போர்களை மூட்டாதே, நீ தான் உலகின் முதல் எதிரி, இந்திய மேலாதிக்கம் நாட்டிற்கு கேடு, இலங்கை உனது மாநிலம் இல்லை போன்ற பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

அத்துடன் உழைக்கும் தொழிலாளரே ஒன்று சேர்வீர், மைத்திரி ரணில் அரசே மக்களுக்கு பதில் கூறு, வரியும் கடனும் மக்களின் தலையில், தொழிலாளர்களுக்கு உரிமை மறுப்பு, புகையிரத காப்பாளருக்கு நிரந்தர நியமனம் கொடு, காணாமல்போனோருக்கு பதில் இல்லை போன்ற சுலோகங்களை கூறியவாறு ஊர்வலமாக சென்றனர்.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் ஆரம்பமான இவ் ஊர்வலமானது பஜார் வீதியூடாக சென்று வவுனியா நகர சபையினை வந்தடைந்தது. அரசியல் கைதிகள் சிறையில் இருப்பது போன்ற ஊர்த்தியும் பேரணியில் சென்றது.