மாத்தறை கடற்பரப்பில் பாரியளவிலான திமிங்கலம் மீட்பு!!

321

 
மாத்தறை – மணல்கிராமம் (வெலிகம), கம்புருகமுவ கடல் பகுதியில் பாரிய அளவினைக் கொண்ட திமிங்கலம் ஒன்றின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.

சுமார் 50 அடி அளவு நீளமான இந்த திமிங்கலம் நேற்று இரவு கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த திமிங்கலத்தின் உடலில் பல இடங்களில் பெரிய அளவிலான வெட்டுக்காயங்கள் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பெரிய படகு ஒன்றுடன் மோதுண்டமையினால் காயமடைந்து இந்த திமிங்கலம் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

மிரிஸ்ஸ வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் குறித்த திமிங்கலத்தை அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.