180 நாடுகளில் இலங்கை 141 வது இடத்தில்!!

997

ஊழலுக்கு எதிராக குரல் எழுப்புவதில் முன்னிற்கும் ஊடகவியலாளர்கள் உலகம் பூராகவும் பல்வேறு அச்சுறுத்தல்களையும் தடைகளையும் எதிர்கொள்வதாக ட்ரான்ஸ்பெரன்சி இணடர்நெசனல் அமைப்பு கூறியுள்ளது.

இந்நிலையில் உலக ஊடக சுதந்திரத்தின் அடிப்படையில் இலங்கையில் சிறு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவுன், 180 நாடுகளில் இலங்கை 141 வது இடத்தில் உள்ளதாகவும் அந்த அமைப்பு வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடக சுதந்திர தினம் இன்று(03) உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுவதை முன்னிட்டு ட்ரான்ஸ்பெரன்சி இணடர்நெசனல் ஶ்ரீலங்கா இந்த அறிக்கையை வௌியிட்டுள்ளது.

ஒவ்வொரு நாடுகளிலும் ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு, சட்ட அமைப்பு மற்றும் ஊடக சுதந்திரம் என்பவற்றை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.