வறட்சி காரணமாக பிரதான நீரேந்து பகுதிகளில் நீர்மட்டம் வீழ்ச்சி!!

632

வறட்சியான காலநிலை காரணமாக பிரதான நீரேந்து பகுதிகளில் நீர்மட்டம் வீழ்ச்சியடைந்துள்ளது.

நீர்ப்பாசனக் குளங்களின் நீர் கொள்ளளவு 36 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்முகாமைத்துவ பிரிவு பணிப்பாளர் வசந்த பண்டார பலுகஸ்வெவ கூறினார்.

இதன் காரணமாக நீர்மின்சார உற்பத்தி நீர்த் தேக்கங்களிலும் நீர்மட்டம் 30 வீதமாகக் குறைவடைந்துள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பித்தல் சக்தி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

மகாவலி வலயங்களுக்கு உட்பட்ட நீர்த் தேக்கங்கள் பலவற்றிலும் நீர்மட்டம் வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன் காரணமாக மின்சார உற்பத்தியில் துரித வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பித்தல் சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக் ஷன ஜயவர்தன குறிப்பிட்டார்.