வவுனியாவில் நடைபெறவுள்ள சிறி சபாரத்தினத்தின் 31வது ஆண்டு நினைவஞ்சலி!!

415

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மறைந்த தலைவர் சிறி சபாரத்தினத்தின் 31வது ஆண்டு நினைவஞ்சலி பொதுக்கூட்டம் எதிர்வரும் 6ம் திகதி சனிக்கிழமை மாலை 03.30 மணிக்கு வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற இருக்கின்றது.

ரெலோ இயக்கத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நடைபெற இருக்கும் இவ் அஞ்சலிக் கூட்டத்தில்இ ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், வடமாகாணசபை பேரவை தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், ரெலோ இயக்க செயலாளர் நாயகமும் முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான என்.சிறிகாந்தா உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சிப் பிரதிநிதிகளும் அஞ்சலி உரையாற்றவுள்ளனர்.

ரெலோ இயக்கத்தின் ஸ்தாபக தலைவர்களான தங்கத்துரை, குட்டிமணி போன்றோர் 1983ல் வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட பின்னர் ரெலோ இயக்கத்தின் தலைவராக சிறி சபாரத்தினம் செயற்பட்டு வந்த வேளையில் 1986 ஏப்ரல் மாத இறுதியில் போராட்ட இயக்கங்களுக்கிடையில் இடம்பெற்ற பரஸ்பர மோதல் காரணமாக பல இயக்க போராளிகள் கொல்லப்பட்டதுடன் மே மாதம் ஆறாம் திகதி ரெலோ தலைவர் சிறி சபாரத்தினம் கொல்லப்பட்டிருந்தார்.

கொலை செய்யப்பட்ட சிறி சபாரத்தினம் மற்றும் இயக்க போராளிகள்இ அக்காலத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களின் நினைவு நாளை ரெலோ அமைப்பினர் வருடந்தோறும் மே மாதம் ஆறாம் திகதி அனுஷ்டித்து வருகின்றதுடன் ஏப்ரல் 29ம் திகதியிலிருந்து மே மாதம் ஆறாம் திகதி வரை தமிழ் தேசிய ஒற்றுமை வாரமாகவும் பிரகடனப்படுத்தி நினைவு கூர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.