திடீரென பெண்ணாக மாறிய ஆண் : கண்டியில் நடந்த விநோதம்!!

257

பர்தா அணிந்த நிலையில் கண்டி குட்ஷெட் பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றவரை, கண்டி பொலிஸ் பெண்கள் பிரிவினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

கைது செய்தவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று சோதனையிட்ட போது பர்தாவில் முகத்தை மறைத்திருந்தவர் ஆண் என தெரியவந்துள்ளது..

இந்த நபர் உடலை முழுவதுமாக மறைத்த பர்தாவை அணிந்து கொண்டு குட்ஷெட் பஸ் நிலையத்தில் பயணித்த பயணிகளை அவதானித்துள்ளார். அவர் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துக் கொண்டுள்ளமையினால் பொலிஸ் அதிகாரிகள் அவரை பல மணி நேரம் கண்காணித்துள்ளனர்.

பின்னர் கண்டி பொலிஸ் தலைமையக பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரை அழைத்து சோதனையிட்ட போது அவர், பயணித்துக் கொண்டிருந்த பஸ் வண்டியில் ஒடி சென்று ஏறி தப்பித்துக் கொள்வதற்கு முயற்சித்துள்ளார்.

பஸ் வண்டியை நிறுத்தி குறித்த நபரை கைது செய்த பொலிஸார், அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று சோதனையிட்ட போது பர்தாவில் முகத்தை மறைத்திருப்பது ஆண் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபரின் மனைவி கம்பளை பிரதேசத்தில் நிறுவனம் ஒன்றில் சேவை செய்வதாகவும், அவர் தவறான உறவு வைத்திருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்திற்கமைய முகத்தை மூடி அவரை கையும் களவுமாறு பிடிப்பதற்கு முயற்சித்ததாக அவர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நபரின் மனைவி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் மயிலபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், அவர் ஒரு பிள்ளையின் தந்தை எனவும் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.