வவுனியா மாவட்ட வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபைத் தெரிவும்!!

249

வவுனியா மாவட்ட சிக்கன கடனுதவி கூட்டுறவுச் சங்க சமாசத்தின் 2017ஆம் ஆண்டுக்கான வருடாந்த பொதுச்சபைக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.

எதிர்வரும் 6ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு சமாசத்தின் தலைவர் நா. சேனாதிராசா தலைமையில் சமாச அலுவலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இதன்போது, கடந்த 2015ஆம் ஆண்டுக்கான சமாசத்தின் கணக்காய்வறிக்கை, 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம், 2016ஆம் ஆண்டு சமாசத்தில் கடனைப் பெற்று சீராக மீளச்செலுத்திய சிறந்த சிக்கன கடனுதவி கூட்டுறவுச்சங்களுக்கு நினைவுப்பரிசில் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கூடுதலான சேமிப்பு வைப்புக்களை மேற்கொண்ட சிக்கன கடனுதவி கூட்டுறவுச் சங்கங்களை கௌரவிப்பது மட்டும் இன்றி புதிய இயக்குனர் சபை தெரிவு என்பனவும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்திற்கு பிரதமவிருந்தினராக வவுனியா மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் வி. கே. இராவீந்திரநாதன், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் க. சிறிகரன், கணக்காய்வாளர் எஸ். சிவாகரன், மற்றும் கூட்டுறவுச்சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.