வவுனியாவில் தொழிலுக்குச் சென்றவர் மீது கத்திக் குத்து!!

229

வவுனியா, புளியங்குளம், பழையவாடி கிராமத்தில் சீவல் தொழிலுக்குச் சென்ற ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்தில் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

புளியங்குளம், பழையவாடி கிராமத்தில் சீவல் தொழிலுக்காகச் சென்ற கல்மடுவைச் சேர்ந்த அ.ஞானசீலன் (வயது 48) என்ற குடும்பஸ்தரை பின்தொடர்ந்த சிலர் அவருடன் முரண்பட்டு அவர் வைத்திருந்த கத்தியைப் பறித்து அவர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த குடும்பஸ்தர் புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.