பல துறைகளில் இன்று காலை முதல் பணிப் பகிஸ்கரிப்பு!!

434

மாலபே சயிட்டம் நிறுவனத்தை மக்கள் மயப்படுத்த வேண்டும் என்பது உட்பட 3 கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு இன்று காலை 8 மணிதொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கத்தின் உதவி செயலாளர் ஹரித அலுத்கே கருத்து வெளியிடுகையில், பல துறை சார்ந்த சேவைகள் இதனூடாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியாக மருத்துவமனைகளில் மருத்துவர்களும் இதர சுகாதார பணியாளர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட போது அத்தியாவசிய மற்றும் அவசர சிகிச்சை பிரிவு சேவைகள் நிறுத்தப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டார்.

தமது கோரிக்கைகளுக்கு உரிய பதில்கள் வழங்கப்படும் பட்சத்தில் மாத்திரம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணிப்புறக்கணிப்பை கைவிட தயாராக இருப்பதாக மருத்துவர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.