எய்ட்ஸ் நோயை தடுப்பதற்கு புதிய வழியை கண்டுபிடித்துள்ள விஞ்ஞானிகள்!!

272

எய்ட்ஸ் நோயை குணப்படுத்துவதற்கு விலங்குகளின் உடல்களை கொண்டு, புதிய மரபணு சிகிச்சை முறை ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர்.

எய்ட்ஸ் நோயை குணப்படுத்துவது தொடர்பாக அமெரிக்காவின் டெம்பிள் மற்றும் பீட்டர் பல்கலைக்கழகங்களை சேர்ந்த விஞ்ஞானிகள் பல வருடங்களாக ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் எலி உடலில் எய்ட்ஸ் கிருமியை செலுத்தி அதை குணப்படுத்தும் வகையில் சிகிச்சையை மேற்கொள்வதற்காக, மனிதனின் மரபணுவில் மாற்றத்தை ஏற்படுத்தி, குறித்த எலியின் உடல்கூறுகளில் மாற்றங்களை ஏற்படுத்தி அளிக்கப்பட சிகிச்சை முறை காரணமாக எலியின் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அது எய்ட்ஸ் கிருமியை முற்றாக அழித்துள்ளதாக குறித்த பல்கலைக்கழக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மனித உடம்பில் படிமுறையாக பரவும் எய்ட்ஸ் நோயானது, மேற்குறித்த மரபணு மாற்ற சிகிச்சையின் மூலம் எச்.ஐ.வி. கிருமியாக இருக்கும் போதே இல்லது செய்வதற்கான சாத்தியங்கள் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு விலங்குகளின் உடல்களில் பரிசோதிக்கப்பட்டுள்ள குறித்த மரபணுமாற்ற சிகிச்சை முறையானது, விரைவில் மனித உடல்களில் செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டதன் பின்னர் மருத்துவ உலகிற்கு அறிமுகப்படுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.