பாகுபலிக்காக 6000 பெண்களை நிராகரித்த பிரபாஸ்!!

240

பாகுபலி படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் சுமார் 6,000 பெண்களை பிரபாஸ் நிராகரித்ததாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த பாகுபலி-2 படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்தின் வசூல் இதுவரையில் 700 கோடி இந்திய ரூபாவை தாண்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விரைவில் 1000 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் மூலம் நடிகர் பிரபாஸ் இந்திய சினிமாவில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறார். பாகுபலி-2 படத்திற்காக, அவர் எடுத்துள்ள முயற்சி மற்றும் உழைப்பினைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

பாகுபலிக்காக 5 வருடங்கள் வேறு எந்த படத்திலும் நடிக்காமல் பிரபாஸ் தனது முழு பங்களிப்பையும் அளித்திருந்தார்.

இதனாலேயே பிரபாஸை பல மேடைகளில் பலமுறை ராஜமௌலி பாராட்டியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பாகுபலி-2 படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது பிரபாஸ் பணக்கஷ்டத்தில் இருந்ததாகவும் ராஜமௌலி தெரிவித்திருந்தார்.

இது ஒருபுறம் இருக்க, பாகுபலி படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது, பிரபாஸ் தனது குடும்ப வாழ்க்கையில் இருந்தும் சற்றே ஒதுங்கி இருந்துள்ளார். பாகுபலி படத்தில் நடித்த அந்த இடைப்பட்ட காலத்தில் மட்டும் சுமார் 6,000 பேர் பிரபாஸை திருமணம் செய்து கொள்ள தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் பாகுபலி படத்தில் நடிக்கும் ஒரே காரணத்திற்காக அனைத்து பெண்களையும் பிரபாஸ் நிராகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.