வவுனியா மணிக்கூட்டுக் கோபுரத்தில் குறுக்காக நின்ற பாரஊர்தியால் வாகன நெரிசல்!!

463

 
வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகே இன்று (05.05.2017) பிற்பகல் 4 மணியளவில் பாதையின் குறுக்கே பாரவூர்தி நின்றதனால் பாரிய வாகன நெரிசல் காணப்பட்டது.

கண்டி வீதியுடாக யாழ் நோக்கி பயணித்த எரிபொருள் பாரவூர்தியில் ஏற்ப்பட்ட இயந்திர கோளாறு காரணமாக வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகே தரித்து நின்றது. இதனால் அவ்விடத்தில் பாரிய வாகன நெரிசல் காணப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

தற்போது வாகனத்தின் இயந்திரத்தின் ஏற்ப்பட்ட பழுதினை திருத்தும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.