வவுனியா பிரதான வீதி ஓரத்தில் இன்று (05.05.2017) மாலை 5 மணியளவில் வயோதிபர் ஒருவர் வீழ்ந்த நிலையில் காணப்பட்டார்.
இவர் வீதியோரத்தில் வீழ்ந்திருப்பதை வீதியில் பயணிக்கும் மக்கள் அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டு சென்றுள்ளனர். இவருக்கு உதவ யாரும் முன்வரவில்லை.
இவர் வவுனியாவில் பெய்து வரும் கடும் மழையிலும் நனைந்த நிலையில் வீதியோரத்தில் காணப்பட்டதை அவதானிக்க கூடியதாக இருந்தது.