வவுனியா பாடசாலைகளில் மாணவர் வருகை மந்தம் : காரணம் என்ன?

557

 
வவுனியாவில் பாடசாலைகளில் மாணவர்களின் வருகை இன்று(05.05.2017) மிகவும் குறைவாக காணப்பட்டது.

​மாலபே சைட்டம் கல்லூரிக்கு எதிராக நாடளவிய ரீதியில் நடைபெற்றுவரும் வைத்தியர்களின் பணிப் பகிஸ்கரிப்பிற்கு ஆதரவாக அகில இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட பல தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில் பாடசாலைகள் இன்று இயங்காத என்ற வதந்தியை அடுத்து வவுனியா பாடசாலைகளில் மாணவர்களின் வருகை மிகவும் மந்தமாக காணப்பட்டது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாடசாலை ஆசிரியர் ஒருவர், பாடசாலைக்கு வந்த மாணவர்களையும் முச்சக்கர வண்டி சாரதிகள் பாடசாலை இல்லை எனக் கூறி திருப்பி அனுப்பியதாகவும் முச்சக்கரவண்டி சாரதிகள் இன்று பாடசாலை நடைபெற்றபோதும் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொண்டதுடன் மாணவர்களை திரும்பவும் அவர்களின் வீடுகளில் கொண்டுபோய் சேர்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக வவுனியா வலயக்கல்விப் பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில், கல்வி அமைச்சர் ஏற்கனவே பாடசாலைகள் இயங்கும் என அறிவித்திருக்கும் நிலையில் எங்கள் வலயத்தால் எந்தவிதமான சுற்று நிருபங்களும் பாடசாலை இயங்காது என அதிபர்களுக்கு அனுப்பப்படவில்லையென தெரிவித்தார்.