யாழில் மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை : 17ஆம் திகதி வரை விளக்கமறியல்!!

213

தனது மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி அதனை வீடியோவாக பதிவு செய்து வைத்திருந்த நபர் ஒருவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சந்தேகநபரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ரி.கருணாகரன் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

திருட்டு குற்றச்சாட்டு தொடர்பில் கணவன் மற்றும் மனைவி ஆகியோரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்திருந்ததுடன், அவர்களிடம் இருந்து சான்றுப் பொருட்களையும் கைப்பற்றியிருந்தனர்.

இதன் போது மனைவியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கைத்தொலைபேசியை சோதனை செய்த போது, அதில் சிறுமி ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை வீடியோவாக பதிவு செய்யப்பட்டிருந்தது.

இது குறித்து விசாரணை செய்தபோது துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டது சந்தேகநபரின் மகள் எனத்தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் பிரிதொரு வழக்கை தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையிலேயே, குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போது, சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.