ஹம்பாந்தோட்டை சூரியவெவ பகுதியில் பெண் ஒருவர், தனது கணவனை தீ மூட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றதாகவும் உயிரிழந்த நபர் 67 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடும்பத் தகராறு காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் கூறியுள்ளனர்.
கணவரை தீ மூட்டி கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஹம்பாந்தொட்டை பொலிஸார் குறிப்பிட்டனர்.
கைது செய்யப்பட்டுள்ள பெண், ஹம்பாந்தோட்டை நீதவான் நிதிமன்றில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.