வவுனியாவில் சிங்கள மாணவிக்கு முதன் முறையாக சலங்கை அணிவிக்கும் நிகழ்வு!!

389

 
வவுனியாவில் முதன்முறையாக சகோதர இனத்தை சேர்ந்த மாணவி ஒருவருக்கு சலங்கை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

வவுனியா கந்தசுவாமி கோவிலில் நாட்டிய ஆசான் செந்தூர் செல்வனின் சிதம்பரேஸ்வரன் நடனாலய கலைக்கூட மாணவியான ஹசினி கவந்தியா (வயது 11) என்ற மாணவிக்கு சலங்கை அணிவிக்கப்பட்டுள்ளதுடன் மாணவியின் நடனமும் இடம்பெற்றுள்ளது.

அனுராதபுரம் தம்புத்தேகம பிரதேசத்தை சேர்ந்த ஹசினி கவந்தியா பரதத்தின் மீது கொண்ட அதீத பற்றுக்காரணமாக தனது 11ஆவது வயதில் தன் காலில் சலங்கையிட்டு பரதம் பயின்றுள்ளார். அத்துடன் அம்மாணவியின் பெற்றோர் இதற்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.

இதேவேளை, வவுனியாவில் சகோதர இனத்தைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு முதல் முறையாக சலங்கையிடும் நிகழ்வானது இடம்பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.