வெளிநாடொன்றிலிருந்து நாடு கடத்தப்படவுள்ள இலங்கை குடும்பம்!!

267

மூன்றாம் நாடு ஒன்றில் அடைக்கலம் கோருவதற்காக ஹொங்கொங்கில் தங்கியுள்ள இலங்கையர் நாடு கடத்தப்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்க ரகசியங்களை வெளியிட்ட புலனாய்வு அதிகாரியான எட்வேட் ஸ்நோவ்டென்னுக்கு தம்முடன் தங்க இடமளித்த இலங்கையர்களே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளதாக தெரியவருகிறது.

இந்த சம்பவத்தில் இலங்கை அரசாங்கம் பின்னணியில் இருந்து செயற்படுவதாக குறித்த இலங்கையர்களின் சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்

குறித்த அகதிகளில் ஒருவரான இலங்கையின் முன்னாள் இராணுவ வீரர் அஜித் புஸ்பகுமார, இது தொடர்பில் தகவல் அளிக்கையில், எதிர்வரும் திங்கட்கிழழை தமக்கு குடிவரவு திணைக்களத்தின் இறுதி நேர்முக விசாரணை இடம்பெறவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்

இந்தநிலையில் உரிய ஆவணங்களை தாம் சமர்ப்பித்துள்ள போதும் தாம் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்

இவருடன் 2010 ஆம் ஆண்டு முதல் தங்கியுள்ள ஏனைய இரண்டு அகதிகளும் அவரின் பிள்ளைகளும் இதேபோன்ற அச்சத்தை வெளியிட்டுள்ளனர்.

இலங்கையில் உயிரச்சுறுத்தல் என்றுக்கூறி சுப்புன் திலின கல்பாத்த அவருடைய மனைவி நதீகா நோனிஸ் மற்றும் ஹொங்கொங்கில் பிறந்த மூன்று பிள்ளைகளே நாடு கடத்தல் நெருக்குடிக்கு முகங்கொடுத்துள்ளனர்.