முச்சக்கர வண்டி விபத்தில் இருவர் படுகாயம்!!

234

 
மட்டக்களப்பு பாலமீன்மடு பகுதியில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (05.05) மாலை இடம்பெற்றுள்ளது.

முச்சக்கர வண்டி வேக கட்டுப்பாட்டை இழந்து மின்சார தூணில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

இதில் பயணம் செய்த ஒருவரும் சாரதியும் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஓட்டமாவடியில் இருந்து மட்டக்களப்பு பாலமீன்மடுவில் உள்ள வெளிச்சவீட்டினை பார்வையிடச்சென்றவர்களே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளனர்.

இதேவேளை, விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.