வவுனியா, சிந்தாமணி ஆலய வீதியில் அமைக்கப்பட்டிருந்த இரு வீதி குறியீட்டு சமிக்ஞைகள் விசமிகளால் நேற்று சேதமாக்கப்பட்டுள்ளது.
நேற்று காலையில் இருந்தே குறித்த இரு வீதி குறியீட்டு கம்பங்களும் விசமிகளால் வீதியில் வளைத்து போடப்பட்டிருந்தன.
இதனை அவதானித்த சிறுவர்கள் மற்றும் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பினர் இணைந்து அதனை மீள நிலை நிறுத்தி வீதிக் குறியீட்டை செப்பனிட்டனர்.
இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்பதற்கு இணங்க இவர்கள் செய்த இந்த செயல் பலருக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளது.










