16 வயதானவருக்கு 10 வருட சிறைத் தண்டனை!!

655

16 வயதான ஒருவருக்கு மாத்தறை மேல் நீதிமன்றத்தினால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு மொரவக்க பிரதேசத்தில் 3 வயதான சிறுமியை தடியால் தாக்கி கொலை செய்தமை தொடர்பாக அந்த சிறுவன் மீது மாத்தறை மேல் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு நேற்று (08.05) மாத்தறை மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் சந்தேகத்திற்குரிய சிறுவன் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளான்.

நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்த மாத்தறை மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த, குறித்த கொலை மனித படுகொலை என தீர்ப்பளித்துள்ளார்.

இதன்காரணமாக 16 வயதான சிறுவனுக்கு கடும் வேலையுடனான 10 வருட சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.