இரண்டு தினங்களுக்கு மதுக்கடைகள் மூடப்படும்!!

241

எதிர்வரும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு மதுக்கடைகள் மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாளை மற்றும் நாளை மறுதினம் நாடு முழுவதிலும் உள்ள மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெசாக் பௌர்ணமி தினத்திற்காக மதுக்கடைகள் மூடுவது குறித்து அரசாங்கம் எவ்வித அறிவித்தலையும் கடந்த 7ம் திகதி வரையில் விடுக்கவில்லை என கலால் திணைக்கள உயர் அதிகாரியொருவர் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

எனவே எதிர்வரும் 10 மற்றும் 11ம் திகதிகளில் மதுக்கடைகளை மூடுமாறு கலால் திணைக்களம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு தினங்களிலும் மதுக்கடைகளை திறப்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.