பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக பல நிமிடங்கள் முடங்கியுள்ளது.
தொழில்நுட்ப சிக்கல் காரணமாக சுமார் 40 நிமிடங்கள் வரையில் பேஸ்புக் தளம் முடங்கியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
“ஏதோ தவறாகி விட்டது” சரிப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் விரைவில் பேஸ்புக் வழமைக்கு திரும்பும் எனவும் அதன் பக்கத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் தீவிரமாக செயற்பட்ட பேஸ்புக் தொழில்நுட்ப குழு, சமூக வலைத்தளத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்துள்ளனர்.
தற்போது பேஸ்புக் தளம் வழமைபோன்று செயற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக் நிறுவன உரிமையாளருக்கு எதிராக ஏனைய சமூக வலைத்தளங்களினால் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.