வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பேருந்து நிலையத்தை அமைக்க கோரிக்கை!!

385

வவுனியா பேருந்து நிலையத்தினை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள நகரசபைக்குச் சொந்தமான இடத்தில் அமைத்துத்தருமாறு கோரி வடமாகாண போக்குவரத்து அமைச்சர் ப.டெனீஸ்வரனுக்கு வவுனியா வர்த்தக சங்கம் இன்று கடிதம் அனுப்பியுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..

நாட்டில் பல பாகங்களிலும் மக்கள் பாவணைக்கு ஏற்ற இடங்களைத் தெரிவு செய்து திட்டங்கள் செயற்படுத்தப்படவில்லை. பல கட்டங்கள் திறந்துவைக்கப்பட்டும் மக்கள் பாவனையற்றுக்கிடக்கின்றது.

எனவே வவுனியா இ.போ.ச பேருந்துகள் தற்போது இருக்கும் பேருந்து நிலையத்திலிருந்து சேவைகளை மேற்கொள்ள முடியும்.

தனியார் பேருந்து நிலையத்தை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள நகரசபைக்குச் சொந்தமான இடத்தில் அமைத்து தருமாறு வடமாகாண போக்குவரத்து அமைச்சரிடம் வவுனியா வர்த்தக சங்கம் கோரியுள்ளதுடன் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அது தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.