6 மாத குழந்தையும் தாயும் குத்திக் கொலை!!

278

கொஸ்கொட தெற்கு பொரலுகெடிய பகுதியில் 6 மாத குழந்தையும் தாயும் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த தாயின் வயது 38 என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் யார் என்பது தொடர்பில் தற்போது வரையில் எந்த தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.

எனவே,சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.

எவ்வாறாயினும், குறித்த பெண்ணின் கணவர், மனநலக் குறைபாடு காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.