துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் கான்ஸ்டபில் மரணம், சிறார்கள் காயம்!!

261

பிலியந்தலையில் வங்கி ஒன்றுக்கு அருகாமையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபில் மரணமானார். மரணமடைந்தவர் போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி என தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் பொலிஸ் அதிகாரிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு சென்றுள்ளனர்.
பொலிஸ் வாகனத்தை செலுத்தி அலுவலரே சம்பவத்தில் பலியானமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது வாகனத்தில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு காயம் ஏற்படாத போதும், அருகில் கடையொன்றின் உரிமையாளரின் பிள்ளைகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த சிறார்கள் தற்போது களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்