கொழும்பில் மேலும் ஒரு இளம் பெண்ணை காணவில்லை!!

240

கொழும்பில் காணாமல் போன இளம் பெண் தொடர்பில் தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த மாணிக்கராஜா மொனிகா என்ற 19 வயதுடைய பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளார். இது குறித்து கிரேன்பாஸ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பெண் தொடர்பில் தகவல் தெரிந்தால் 011 – 2421414 என்ற இலக்கத்துக்கு அழைத்து பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்லது பொலிஸ் நிலைய பொது மக்கள் தொடர்புகள் பிரிவின் 011 – 2436161 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னால், கொழும்பில் காணாமல் போன மகேஷா சந்தமாலி குணதிலக என்ற இளம் பெண் ஒருவரை தேடி பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.