இலங்கையில் டெங்கு நோயாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி!!

403

dengu

இவ்வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 10ஆயிரத்தால் வீழ்ச்சியடைந் துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் செப்டம்பர் இறுதியளவில் 35000 டெங்கு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.

இவ்வருடத்தில் செப்டம்பர் இறுதியளவில் 24 384 நோயாளர்களே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் மட்ட குழுக்கூட்டத்தில் இதுபற்றித் தெரிவிக்கப்பட்டது. சுகாதார அமைச்சின் செயலாளர் தலைமையில் இக்கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

அக்டோபர் 07 முதல் 13 ஆம் திகதி வரை அமுலாக்கப்படவுள்ள தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தின் வெற்றிக்காக அமைச்சுக்கள் மட்டக் குழுவை அழைத்து ஒத்துழைப்பைப் பெறுமாறு அமைச்சர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

அதன் பேரில் இக்கூட்டம் நடைபெற்றது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமளவில் 80 பேர் டெங்குவினால் மரணித்தனர். இவ்வாண்டு 64 பேர் மட்டுமே மரணித்துள்ளனர்.

இவ்வாண்டில் 47 வீதமான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். வீசப்படும் கழிவுப் பொருட்கள் மூலமே டெங்கு நுளம்புகள் பெருகுகின்றன. இவற்றை அகற்றுவதன் மூலம் டெங்கை ஒழிக்கலாம். டெங்கை முற்றாக ஒழிப்பது எம் கைகளிலேயே உள்ளது.