மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் இன்று(10.05) பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் இன்று மதியம் 2 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் சடலமாக மீட்கப்பட்ட பெண் குறித்த மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.