கிங் கங்கையில் மூழ்கி இரண்டு மாணவர்கள் பலி!!

257

கிங் கங்கையில் நீராடச் சென்ற 14 வயதுடைய பாடசாலை மாணவர்கள் இரண்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

நேற்று மாலை 07 மாணவர்கள் இணைந்து கிங் கங்கையில் குளிப்பதற்காக கிந்தொட்டை பாலத்தை அண்மித்த ஆற்றுப் பகுதிக்கு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களில் இரண்டு பேரை நீரலையில்இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்த நிலையில் சுழியோடிகளின் உதவியுடன் இருவரினது சடலங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இரண்டு பேரும் காலி பொத்தல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வாழைச்சேனை முரதானை கலப்பில் நீராடிக் கொண்டிருந்த 20 வயது இளைஞர் ஒருவர் முதலை பிடித்துச் சென்றதில் உயிரிழந்துள்ளார்.