காங்கேசன்துறை கடற்பரப்பில் 9 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது!!

226

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை கடற்பரப்பில் 9 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

9.3 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை பதில் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் ருவன் பிரேமவீர தெரிவித்தார்.

நீர் உட்புகாத வகையில் பொலித்தீனால் பொதியிடப்பட்ட 9 பொதிகள் படகொன்றில் மறைத்து வைக்கப்பட்டுள்ளன.

பொலித்தீனால் பொதியிட்டு, கடலில் மிதக்க விட்டு போதைப்பொருள் கடத்தப்படுவது, கடத்தல்காரர்களின் வழிமுறைகளில் ஒன்றென பாதுகாப்புப் பிரிவு தெரிவித்தது.

நேற்றும் இன்றும், 210 கிலோகிராமிற்கும் அதிக நிறையுடைய ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் பெறுமதி சுமார் 210 கோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.