வவுனியா புதிய பேருந்து நிலையத்தை பாவனைக்கு விடவேண்டும் : மக்கள் கோரிக்கை!!

263

பெரும் நிதிச் செல­வில் வவு­னி­யா­வில் அமைக்­கப்­பட்ட பேருந்து நிலை­யம் பாழ­டை­வ­தற்கு முன்­னர் மாற்று ஏற்­பா­டு­களை மேற்கொண்டு அதை மக்­கள் பயன்­பாட்­டுக்கு விட வேண்­டும் என்று மாவட்ட மக்­கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முறையான திட்­ட­மி­ட­லின்மை கார­ண­மா­க­வும், ஒத்­து­ழைப்பு இன்மையாலும் 195 மில்­லி­யன் நிதிச் செல­வில் அமைக்­கப்­பட்ட பேருந்து நிலை­யம் கால்­ந­டை­க­ளி­ன­து கூடா­ர­மா­க விளங்குகின்­றது. மாவட்­டத்­தின் அபி­வி­ருத்­திக்கு உகந்த வகையில் பயன்­ப­டுத்த ஆவன செய்ய வேண்­டும்.

மக்­க­ளின் வரிப்பணத்­தில் அமைக்­கப்­பட்ட இந்­தத் திட்­டம் வீணா­காத வகை­யில் பொருத்­த­மான முடிவை மேற்­கொள்ள வேண்­டும். பேருந்து நிலை­ய­மா­கவோ அல்­லது பொருத்­த­மான செயல்­பாட்டையோ மேற்­கொண்டு கட்­ட­டம் பாதிப்படையாதவாறு பாதுகாக்க முன்­வர வேண்­டும் என்று அவர்­கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.