வவுனியா சுகாதாரத் தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வட மாகாணசபைக்கு அதிகாரமும் இல்லை : செ.மயூரன்!!

617

 
இன்று (16.05) காலை 10.30 மணியளவில் சுகாதாரத் தொண்டர்களின் போராட்டகளத்திற்குச் சென்ற வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் சுகாதாரத் தொண்டர்கள் கடந்த 13வது நாளாக மேற்கொண்டு வரும் போராட்டத்தினை ஆதரித்து அவர்களைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்..

சுகாதாரத் தொண்டர்களின் போராட்டம் நியாயமானது. அவர்களின் போராட்டத்தை வடக்கு மாகாண சபைக்கு திருப்பவது என்பது பொருத்தமில்லாதது. வடக்கு மகாகண சுகாதார அமைச்சரிடம் தொடர்பு கொண்டபோது வடக்கு மகாணசபைக்கும் தனது அமைச்சுக்கும் நியமனம் வழங்கவதற்கு அதிகாரம் இல்லை என்று தெளிவாக தெரிவித்துள்ளார். அத்துடன் மக்கள் பிரதிநிதிகள் போராட்டக்களத்திற்குச் சென்று தவறாக கருத்துக்களை தெரிவித்து வருவதாகவும் வருத்துத்துடன் தெரிவித்துள்ளார்.

இவ்வளவு போராட்டங்கள் நடைபெற்றும் இந்த வடக்கு மாகாண சபைக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை என்று தெரிந்த இந்த மத்திய அரசு ஏன் இவர்கள் தொடர்பான விடயத்திலே அக்கறைகொள்ளாமல் இருக்கின்றார்கள் என்ற கேள்வி எங்களுக்குள்ளே இருக்கின்றது.

வடக்கு மாகாணசபையை பல வருடங்கள் நடத்தாது முதன் முதலாக 2013ம் அண்டு வடக்கு மாகாண சபையை உருவாக்கி இதன் பின்னர் 2015ம் ஆண்டு 900 பேருக்கு விஷேட அதிகாரங்கள் மூலம் அல்லது விஷேட செல்வாக்கினைப் பயன்படுத்தி ஒரு வேலைவாய்ப்பினைக் கொடுத்துள்ளார்கள்.

மத்திய அரசு ஒரு விஷேட மான கோரிக்கையை கொண்டு வந்து இப்போது இருக்கின்ற வடமாகாணம் முழுவதும் இருக்கின்ற சுகாதாரத் தொண்டர்களுக்கு நிரந்தர நியமனத்தைக் கோருகின்றார்கள். கடந்த 20 வருடங்களாக வேலை செய்திருக்கின்றார்கள் என்று மேலும் தெரிவித்தார்.