டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளின் போது 2000 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்!!

340

டெங்கு அபாயம் நிலவும் 12 மாவட்டங்களில் இரு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளின் போது சுமார் 2000 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 8000 பேருக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ப்ரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

கடந்த 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் டெங்கு அபாயம் நிலவும் 12 மாவட்டங்களில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

நாடு முழுவதிலும் சுமார் 48,000 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு , புத்தளம் , உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.