இராணுவ வீரராக ஆசைப்பட்ட டோனி!!

308

dhoni-army1-300

இராணுவ வீரராக ஆசைப்பட்டேன் என தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் டோனி.

இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவரான டோனி ராஞ்சியில் உள்ள இராணுவத்தின் பரசூட் ரெஜிமென்ட்டில் ஒருநாள் செலவிட்டார். அப்போது இராணுவ வீரர்களுடன் பேசி மகிழ்ந்தார்.

அப்போது நான் சிறுவயதில் இருந்தே இராணுவத்தில் சேர விரும்பினேன். இராணுவ வீரர்களை பார்க்கையில் நானும் ஒருநாள் அப்படி ஆவேன் என்று நினைத்தேன் என தெரிவித்தார்.

நீங்கள் எப்படி கூலாக இருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, செய்தியாளர் கூட்டத்திற்கு முந்தைய நாள் குளிர்சாதன பெட்டிக்குள் உட்கார்ந்து கொள்வேன் அதனால் தான் கூலாக இருக்கிறேன் என்றார்.

மேலும் இராணுவ சீருடை ஸ்பெஷலானது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இராணுவ வீரர்களின் குடும்பத்துடன் நின்று புகைப்படத்திற்கு போஸ் கொடுத்ததுடன் வீரர்களின் குழந்தைகளுக்கு ஓட்டோகிராப் போட்டும் கொடுத்தார்.