தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் அகில இலங்கை மட்டத்தில் அதிகூடிய 194 புள்ளிகளைப் பெற்ற ஏழாலை சைவ சன்மார்க்க வித்தியாலய மாணவனான பரமானந்தம் தனுராஜ் நேற்று ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியினால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் அழைப்புக்கு அமைய இவர் நேற்று முன்தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் இருந்து பெற்றோருடன் கொழும்புக்கு சென்றுள்ளார்.
யாழ்ப்பாணத்தின் வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட உடுவில் கல்விக் கோட்டத்தை சேர்ந்த பாடசாலை இது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை, நாட்டின் பல பாகங்களிலும் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற 19 மாணவர்கள் ஜனாதிபதி மக்ந்த ராஜபக்சவினால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்களுக்கு 1லட்சம் ரூபாவுக்குரிய மக்கள் வங்கி காசோலைகளும், சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையுடன் மடிக்கணினிகளும் வழங்கப்பட்டன.