மடிக் கணினியை மார்பின் மீது வைத்துக் கொண்டு கிரிக்கெட் பார்த்த 17 வயது மாணவன் மரணம்!!

331

லெப்டொப் கணி­னியை மார்பின் மீது வைத்துக் கொண்டு கிரிக்கெட் போட்­டி­யொன்றை பார்த்துக் கொண்­டி­ருந்­த­போது உயி­ரி­ழந்த இளை­ஞ­னின் மரணம் தொடர்­பாக அரச இர­சா­யன பகுப்­பாய்­வாளர் மேற்­கொண்ட ஆய்வில் கண­னி­யி­லி­ருந்து வெளி­யே­றிய இரு­வி­த­மான வாயுக்­களை சுவா­சித்­ததால் மரணம் சம்­ப­வித்­துள்­ள­தாக கொழும்பு திடீர் மரண விசா­ரணை அதி­காரி எம். அஷ்ரப் ரூமி தெரி­வித்­துள்ளார்.

லெப்டொப் கண­னியை மார்பின் மீது வைத்துக் கொண்­டி­ருந்த கொழும்பு 14 கிராண்ட்பாஸ் வீதியைச் சேர்ந்த 17 வய­தான மாண­வனே உயி­ரி­ழந்தார்.

இர­சா­யன பகுப்­பாய்வு அறிக்கை மாணவன் உயி­ரி­ழந்த சுமார் பத்து மாதங்­க­ளுக்குப் பின்னர் வெளி­யி­டப்­பட்­டி­ருப்­பது குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இந்த மாணவனின் மரண விசா­ரணை சட்ட வைத்­திய அதி­காரி டாக்டர் எம். ஓகல் சங்­கரால் மேற்­கொள்­ளப்­பட்­ட­துடன், மர­ணத்­துக்­கான கார­ணத்தை கண்­டு­பி­டிக்க முடி­யாமற் போனதால் உடற்­பா­கங்கள் இர­சா­யன பகுப்­பாய்­வா­ள­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டன.

இந்தப் பகுப்­பாய்வு அறிக்­கை­யின்­படி Diazepam மற்றும் imperamine என்ற இரு விஷ வாயுக்­களை சுவா­சித்து சுவாசக் குழாய் வழியாக விஷம் உடலில் கலந்ததால் இம்மரணம் சம்பவித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.