பிரசவத்துக்காக கர்ப்பிணி மனைவியை 40 கி.மீ சுமந்து வந்த கணவர்..

411


baby

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ளது கொன்னி மலை வனப் பகுதி. இங்கு அய்யப்பன் என்பவர் தனது 7 மாத கர்ப்பிணி மனைவி சுதாவுடன் வசித்து வருகிறார். வனப் பகுதியில் கிடைக்கும் தேன் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து இவர்கள் வாழ்க்கை நடத்தினர்.



கடந்த வாரம் சுதாவுக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டது. அங்கு போக்குவரத்து வசதி இல்லை. அங்கிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள கொக்கத்தோடு என்ற இடத்துக்கு வந்தால்தான் ஜீப்பில் பயணம் செய்ய முடியும். எனவே சுதாவை தோளில் சுமந்தபடி கொக்கத்தோடு செல்ல அய்யப்பன் முடிவு செய்தார். கனமழையில் நனைந்த படி சுதாவை தூக்கிக் கொண்டு மலைப்பாதை வழியாக அய்யப்பன் இறங்கினார் .
கொக்கத்தோடு வந்ததும் இருவரும் ஜீப்பில் ஏறி பத்தனம் திட்டா மருத்துவமனைக்கு சென்றனர்.

அங்கு சுதாவை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு அதிக ரத்த அழுத்தம், வயிற்றில் சதைபிடிப்பு மற்றும் அதிகளவில் நீர் சேர்ந்திருந்ததை கண்டுபிடித்தனர். சுதாவை உடனடியாக கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி அறிவுறுத்தினர். அங்கு சுதாவை மகப்பேறு மருத்துவர் சுதாவை பரிசோதித்தார். வயிற்றில் இருந்த குழந்தை இறந்திருந்தது.



சுதாவுக்கு பிரசவ வலி மருந்து கொடுத்து, இறந்த குழந்தையை கடந்த வாரம் புதன் கிழமை வெளியேற்றினர். சுதா தீவிர சிகிச்சை பெற்று உடல் நலம் தேறி வருகிறார். இவர்களது சோகத்தை பத்திரிக்கையில் படித்தவர்கள் அய்யப்பன் தம்பதிக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர்.