சென்னை வீரர்களை திட்டிய வட்சனுக்கு அபராதம்!!

329

shane_watson_313

தகாத முறையில் பேசிய ராஜஸ்தான் வீரர் வட்சனுக்கு 750 டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.

சம்பியன்ஸ் லீக் டுவென்டி-20 தொடரின் முதல் அரையிறுதி போட்டி ஜெய்ப்பூரில் நடந்தது. சென்னை அணிக்கு எதிரான இப்போட்டியில் ராஜஸ்தான் அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் ராஜஸ்தான் அணியின் ஷேன் வட்சன் சென்னை அணி வீரர்களிடம் தகாத முறையில் பேசியதாக தெரிகிறது.

இதுகுறித்து சம்பியன்ஸ் லீக் நிர்வாகம் வெளியிட்ட செய்தியில் கிரிக்கெட் விதி லெவல்-1 இன் படி இழிவாக பேசுவது சைகை காட்டுவது குற்றம்.

இதனை வட்சன் ஒப்புக்கொண்டார். இவருக்கு 750 டொலர் அபராதம் விதிக்கப்பட்டது என தெரிவித்துள்ளது.