மதவாச்சியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!!

259

 
மதவாச்சி ஹிக்கிரிகொலாவ பகுதியில் நேற்று (22.06) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியை செலுத்தி வந்தவர் பலியாகியதாக மதவாச்சி பொலிசார் தெரிவித்தனர்.

அனுராதபுரம் பகுதியில் இருந்து மதவாச்சி நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி எதிர் திசையில் பயணித்த கண்டர் ரக வாகனத்தை முந்திசெல்ல முற்பட்ட போது கண்டர் வாகனத்தின் மீது முச்சக்கர வண்டி மோதுண்டதிலே இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதன்போது முற்சக்கரவண்டியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் றம்பாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.