கடந்த புதன்கிழமை காட்டிற்கு பாலப்பழம் பறிக்கச் சென்றவேளை உயிரிழந்த 53 வயதான முத்துக்கறுப்பன் குமாரவேல் குடும்பம் மிகவும் வறுமைப்பட்டது. மனைவி கு.ராஜேஸ்வரி தனது நான்கு பிள்ளைகளுடன் குடும்பத்தை காப்பாற்ற வகை தெரியாது நிற்கின்றார்.
இறந்தவர் மதுபாவனை காரணமாக வீட்டில் குடும்ப வன்முறை நடைபெற்றுள்ளது. சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு.கெனடி மூலம் பிள்ளைகள் சிறுவர் இல்லங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர். பெண்பிள்ளை வேப்பங்குளம் அன்பகம் இல்லத்திலும் ஆண்பிள்ளைகள் சாயி சிறுவர் இல்லத்திலும் சேர்க்கப்பட்டுள்ளனர். தாயார் ராஜேஸ்வரி அன்பகம் இல்லத்தில் வேலை பார்த்து வந்தவர் . இவரின் கணவரின் மரணச்செலவுகளை அன்பக இல்ல பொறுப்பாளர் பொறுப்பேற்று நடாத்தியுள்ளார்.
உடனடியாக அனர்த்த முகாமைத்துவ நிறுவனத்தின் மூலம் செட்டிகுள பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.மதி வனஇலாக நிறுவனத்தின் நட்டஈடாக ரூபா 50000 வழங்கி உதவியுள்ளார்.
வீட்டில் சமையல் பாத்திரங்கள் உலர் உணவுகள் எதுவுமற்ற நிலையை மெனிக்பாம் கிராம சேவை உத்தியோகத்தர் திருமதி நி.ஞானசௌந்தரி மூலம் அறிந்து கொண்ட வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகம் இன்று (24.06.2017) சனிக்கிழமை காலை சுமார் இருபதாயிரம் ரூபா பெறுமதியான சமையல் பாத்திரங்கள் மற்றும் உலர்உணவுகளை வழங்கி வைத்துள்ளனர்.
லண்டன் புலம் பெயர் உறவுகளான V3 அமைப்பினரின் நிதி உதவியில் மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாஸன் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.கே.வஸந்தன் கிராமசேவை நிலைய அலுவலகர் திருமதி வஸந்தி சமூக ஆர்வலர் திரு.புருசோத்தமன் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கடும் வறுமையில் உள்ள இந்த குடும்பத்திற்கு மலசலகூடவசதிகள் தண்ணீர் வசதிகள் சரியான முறையில் இல்லாமையால் நலன்விரும்பிகள் சமூக ஆர்வலர்கள் தொண்டு நிறுவனங்களின் உதவி இவர்களுக்கு உடனடியாக அவசியம் என மாவட்ட சமூகசேவை அதிகாரி குறிப்பிட்டார்.















