கடந்த இரு தினங்களாக நாடு தழுவிய ரீதியில் அரசாங்க வைத்தியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டமையால், வைத்தியசாலை நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன.
அதற்கமைய பொலநறுவை மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து வைத்தியர்களும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
எனினும் அந்த மாவட்டத்தின் புலஸ்திகம அரசாங்க வைத்தியசாலையில் ஒரே ஒருவர் வைத்தியர் மாத்திரம் தனியாக வைத்திய பணியை மேற்கொண்டுள்ளார்.
அவர் நூற்றுகணக்கிலான நோயாளர்களுக்கு நாள் முழுவதும் சிகிச்சை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த வைத்தியசாலையில் 4 வைத்தியர்கள் மாத்திரமே சேவை செய்வதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த வைத்தியர் எந்தவொரு நாளும் பணி பகிஷ்கரிப்பில் கலந்து கொண்டதில்லை என கூறப்படுகின்றது.
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அழைப்பின் பேரில் பணி பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டது. எனினும் நேற்றையதினம் பணி பகிஷ்கரிப்பு முடிவுக்கு கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.