
தொலைக்காட்சிப் பெட்டி விழுந்து உடல் நசுங்கி குழந்தை ஒன்று பலியாகியுள்ளதாக கல்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் கல்கமுவ நான்னேரிய – அக்கரவத்தை என்ற பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.
வீட்டில் இரும்பினால் செய்யப்பட்டிருந்த மேசையில் வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சிப் பெட்டி சாய்ந்து குழந்தையின் மேல் விழுந்துள்ளது.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளது.
மூன்று வயதும் நான்கு மாதங்களுமான ஆண் குழந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.





