வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய நுழைவாயில் திறப்பு!!

244

 
நேற்று (25.06.2017) வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய முன் மதில் மற்றும் நுழைவாயில் கதவு என்பன ஆலயத்தின் ஆரம்பகால உறுப்பினர்களான திரு.செல்லப்பா மற்றும் திரு.கனகரெட்ணம், ஆலய நிருவாக சபை உறுப்பினர் திரு.புலேந்திரன் ஆகியோர்களால் சுபவேளையில் திறந்து வைக்கப்பட்டது.

ஆலய பரிபாலனசபைத் தலைவர் ம.நீலாக்காரன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றதுடன் நரசிங்கர் ஆலய சீருடை அறிமுக நிகழ்வும் இடம்பெற்றது. இன் நிகழ்வில் பெரும்திரளான பக்த அடியார்கள் கலந்துகொண்டனர்.

பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தில் வரும் சனிக்கிழமை(01.07.2017) வருடாந்தத் திருவிழா மிகவும் கோலாகலமான முறையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.